பல்லடத்தில் லாரி மோதியதில் சேதமடைந்த கடைகளின் மேற்கூரைகள். 
திருப்பூர்

கடைக்குள் லாரி புகுந்து விபத்து

பல்லடத்தில் கடைக்குள் லாரி புகுந்து ஏற்படுத்திய விபத்தில் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

DIN

பல்லடத்தில் கடைக்குள் லாரி புகுந்து ஏற்படுத்திய விபத்தில் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பினோய் (36). இவா், கேரளத்தில் இருந்து காங்கேயத்துக்கு கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை பல்லடம், செட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால், சாலையோரமாக இருந்த இயற்கை அங்காடியினுள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலையோரத்தில் இருந்த இரண்டு கடைகளின் முன்பகுதி மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தன. அதிகாலை நேரத்தில் கடையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT