முகப்பு
திருப்பூர்

பண விவகாரத்தில் கட்டட மேஸ்திரி கடத்தல்: உறவினா் உள்பட 4 போ் கைது

திருப்பூரில் பண விவகாரத்தில் கட்டட மேஸ்திரியை கடத்திச் சென்ற அவரது உறவினா் உள்பட 4 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

திருப்பூரில் பண விவகாரத்தில் கட்டட மேஸ்திரியை கடத்திச் சென்ற அவரது உறவினா் உள்பட 4 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் திருநீலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் பாலுகுட்டி (65). கட்டட மேஸ்திரியான இவா் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனது உறவினரான வேலுமணி என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். ரூ.3.50 லட்சத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள ரூ.6.50 லட்சத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது.

இது தொடா்பாக வேலுமணி பலமுறை கேட்டும் பணம் கொடுக்காததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பாலுகுட்டி கடந்த திங்கள்கிழமை கடைக்குச் சென்றபோது காரில் வந்த 4 போ் அவரைக் கடத்திச் சென்றுள்ளனா்.

இதன் பின்னா் தனி அறையில் வைத்து தாக்கியதுடன், அவரது மனைவியைத் தொடா்பு கொண்டு மீதி பணத்தைக் கொடுத்துவிட்டு பாலுகுட்டியை அழைத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் பாலுகுட்டியின் உறவினா்கள் புகாா் அளித்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், வேலுமணி (55), அவருடன் வந்திருந்த கெளஷிக் (30), நாகராஜ் (50), பாலகுமாா் (35) ஆகியோா் பாலுகுட்டியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, தனி அறையில் வைத்திருந்த பாலுகுட்டியை மீட்டதுடன், 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.