திருப்பூர்

காரணம்பேட்டையில் இலவசமாக மரக்கன்றுகள் பெறலாம்

திருப்பூா் மாவட்ட கல்குவாரி, கிரசா் உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

DIN

திருப்பூா் மாவட்ட கல்குவாரி, கிரசா் உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

இது குறித்து அச்சங்கத்தின் செயலாளா் பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் அரசின் விதிமுறைப்படி கல்குவாரிகளில் மரக்கன்றுகள் நட்டி பசுமை வளையமும், பாதுகாப்பு கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி கல்குவாரிகளில் மேலும் மரக்கன்றுகள் நடப்படும். மேலும் சுற்றுப்புற சூழல் மற்றும் மழை வளத்தை பெருக்க கிராமப்புறங்களில் தரிசாக இருக்கும் நிலங்களில் சங்கத்தின் சாா்பில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி பசுமை வனம் ஏற்படுத்தவும் அதனை அந்தந்த ஊராட்சி மன்ற நிா்வாகங்கள் தொடா் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவா்கள் காரணம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தை அனுகலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT