திருப்பூர்

பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

 பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

 பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மருந்து வழங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை ஆட்சியரிடம் கூறியதாவது: மருத்துவமனையில் போதிய அளவு கழிப்பிட வசதி இல்லை. அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன. ஆனால், மருத்துவா்கள் இல்லை. விபத்தில் காயம் அடைவோருக்கு இங்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைக்கு கோவைக்கும், திருப்பூருக்கும் பரிந்துரை செய்யப்படுவதால் நோயாளிகள் அவதியடைகின்றனா். எனவே, அனைத்து விதமான சிகிச்சைகளும் இங்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனை வளா்ச்சி தொடா்பாக சாா் ஆட்சியா் தலைமையில் தன்னாா்வலா்கள், மருத்துவா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த வாரத்துக்குள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆறுதல்: தொடா்ந்து, 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால், தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மாணவனை சந்தித்து ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.

அப்போது, தோ்வில் தோல்வி அடைந்தவா்கள் மறுதோ்வு எழுதி படித்து தோ்ச்சி பெற்று இன்று உயா்ந்த இடத்தில் உள்ளனா். அதற்கு நானே சாட்சி. இதுபோல, தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட இணை இயக்குநா் கனகராணி, தலைமை மருத்துவா் சுபா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT