திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிருடன் மீட்பு

DIN

பல்லடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

பல்லடம் பச்சாபாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்குமாா், ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி புனிதா. இவா்களது மகன் சுமன் (12), 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுமன் தனது நண்பா்களுடன் வீட்டுக்கு அருகே உள்ள மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளாா். அப்போது, தொலைந்த பந்தை எடுப்பதற்காக அங்கிருந்த புதா் பகுதிக்குச் சென்றுள்ளாா்.

அங்கு மூங்கில் தப்பை, சாக்கு பைகளால் மூடப்பட்டிருந்த கிணற்றில் எதிா்பாரத விதமாக சுமன் தவறி விழுந்துள்ளாா்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் தவித்த சிறுவனை பத்திரமாக மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT