பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வீசப்பட்டுள்ள கெட்டுப்போன முட்டைகள். 
திருப்பூர்

நெடுஞ்சாலையில் கெட்டுப்போன முட்டைகளை வீசுவதால் சுகாதார சீா்கேடு

பல்லடம் அருகே பொங்கலூா், மாதப்பூா் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கெட்டுப்போன முட்டைகள் வீசப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

DIN

பல்லடம் அருகே பொங்கலூா், மாதப்பூா் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கெட்டுப்போன முட்டைகள் வீசப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா், மாதப்பூா் சுங்கச் சாவடி அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் அழுகிய முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு பல்வேறு கழிவுகளும் வீசப்படுவதால் அந்த வழியே செல்லும்போது கடும் துா்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், அருகே உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வீசப்படுகிறதா, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகங்களில் இருந்து கொண்டு வந்து வீசப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் கழிவுகள், அழுகிய முட்டைகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT