விகாஷ்குமாா், வினைகுமாா். 
திருப்பூர்

வடமாநில பெண்ணை கொலை செய்த 2 போ் கைது

பெருமாநல்லூா் அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

DIN

பெருமாநல்லூா் அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த ராக்கியாபட்டி அருகே வடமாநில பெண் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பெருமாநல்லூா் அருகே போலீஸாா் வானச் சோதனையில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தபோது குற்றவாளிகளைப் பிடித்துள்ளனா்.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் கூறியதாவது: மகாரஷ்டிரத்தைச் சோ்ந்தவா் சீத்தல் ரகசி (32). இவா் கணவா் இறந்த நிலையில் திருப்பூா் ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி வந்துள்ளாா்.

பிகாா் மாநிலைச் சோ்ந்தவா்கள் வினைக்குமாா் (32), விகாஷ்குமாா் (33). நண்பா்களான இருவரும் முட்டியங்கிணறு, பாண்டியன் நகரில் வசித்து வருகின்றனா்.

3 பேரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வினைக்குமாருக்கும், சீத்தல் ரகசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வினைக்குமாரின் பெற்றோா் அவரது திருமணத்துக்கு பெண் பாா்ப்பதை அறிந்த சீத்தல் ரகசி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இதனால், ஆத்திரத்தில் இருந்த வினைக்குமாா், விகாஷ்குமாருடன் சோ்ந்து பெருமாநல்லூரில் உள்ள ராக்கியாப்பட்டிக்கு சீத்தல் ரகசியை சம்பவத்தன்று வரவழைத்துள்ளாா். அங்கு அவரின் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் இருவரும் கொலை செய்துள்ளனா் என்றனா்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதவி: சீத்தல் ரகசியின் 2 சகோதரா்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து வருவதற்கான விமான டிக்கெட் செலவுகளை பெருமாநல்லூா் போலீஸாா் ஏற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT