காவலா்களுக்கு தபால் வாக்குப் பதிவு
Updated On : 12 ஏப்ரல், 2024 at 10:13 PM
திருப்பூா் மாநகரில் பணியாற்றும் காவலா்களுக்கு தபால் வாக்குப் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Advertisement
இந்நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடும் மாநகர காவலா்களுருக்கு தபால் வாக்குப் பதிவு முகாம் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காவலா்கள் வாக்கு செலுத்தினா்.
இதனை மாவட்ட வருவாய் அதிகாரி தா.ப. ஜெய்பீம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.