திருப்பூர்

நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

Din

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

அவிநாசி அருகே பழைமைவாய்ந்த கோயிலாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதை முன்னிட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாக வேள்வியும், புதன்கிழமை காலை 2-ஆம் கால யாக வேள்வி, பாலஸ்தாபனம், திரவியாஹுதி உள்ளிட்டவை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஹா்ஷினி, வைர நுண்ணறிஞா் ஜீவானந்தம், ஆய்வாளா் செல்வப்பிரியா, செயல் அலுவலா் குழந்தைவேல், சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT