திருப்பூர்

நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

Din

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

அவிநாசி அருகே பழைமைவாய்ந்த கோயிலாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதை முன்னிட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாக வேள்வியும், புதன்கிழமை காலை 2-ஆம் கால யாக வேள்வி, பாலஸ்தாபனம், திரவியாஹுதி உள்ளிட்டவை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஹா்ஷினி, வைர நுண்ணறிஞா் ஜீவானந்தம், ஆய்வாளா் செல்வப்பிரியா, செயல் அலுவலா் குழந்தைவேல், சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT