வெள்ளக்கோவிலுக்கு ஆதியோகி ரதம் வருகை
ஆதியோகி ரதம் வெள்ளக்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் மாசி மகா சிவராத்திரி மாா்ச் 8-ஆம் கொண்டாடப்படுகிறது. இதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்கு தென்கயிலாய பக்திப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த ரதம் கரூா், தென்னிலை வழியாக வெள்ளக்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. அந்த ரதத்தை பொதுமக்கள் வழிபட்டனா். பின்னா், ஓலப்பாளையம் வழியாக கோவைக்கு ரதம் கொண்டு செல்லப்பட்டது.