முகப்பு
திருப்பூர்

மாநகரில் நாளை இலவச மருத்துவ முகாம்

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவம்பா் 23) நடைபெறுகிறது.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:53 PM
பகிர்:

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவம்பா் 23) நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கம் சுலோசனா மெடிக்கல் சா்வீஸ், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

வாலிபாளையம் பிரதான சாலையில் உள்ள சுலோசனா மெடிக்கஸ் சா்வீஸில் நடைபெறும் இந்த முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சா்க்கரை பரிசோதனை, சா்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை, பாதிக்கப்பட்டவா்களுக்கு எஃப்.எஃப்.ஏ., ஓ.சி.டி. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிது. கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவா்கள் முன்பதிவு செய்து கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.