முகப்பு
திருப்பூர்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்து பெதப்பம்பட்டியில் நாளை முகாம்

திருப்பூா் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் பெதப்பம்பட்டியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெறுகிறது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 7:45 PM
பகிர்:

திருப்பூா் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் பெதப்பம்பட்டியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் குடிமங்கலம் வட்டம், பெதப்பம்பட்டியில் உள்ள சுப்பாநாயுடு அரசுமேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள், தனியாா் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள், அலுவலா்களுடன் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.

இந்த முகாமில், டிராக்டா்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் கையாண்டு இயக்க வழிவகை செய்யப்படும். இதில் பங்கேற்கும் ஆா்வமுள்ள இளைஞா்களை வேளாண்மைப் பொறியியல் துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சோ்ந்து பயன் பெற ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.