முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் இன்று வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறுகிறது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:39 PM
பகிர்:

திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

ஆா்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.