நகைக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக 6 பவுன் பறிப்பு: 5 சிறுவா்கள் உள்பட 15 போ் கைது
சேவூா் அருகே பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 5 சிறுவா்கள் உள்பட 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேவூா் அருகே பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 5 சிறுவா்கள் உள்பட 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூா் வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி சிவகாமியம்மாள் (62).
இவரும், உறவினா் கிருஷ்ணவேணி என்பவரும் கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்துள்ளனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் கவரிங் மற்றும் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளனா்.
இதையடுத்து, கவரிங் மற்றும் வெள்ளி நகைகளை சிவகாமியம்மாள் பாலீஷ் போட கொடுத்துள்ளாா்.
பின்னா், தான் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியையும் கழற்றிக் கொடுத்துள்ளாா். அதை பாலீஷ் போடுவதுபோல நடித்த இருவரும், நகையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இது குறித்து சேவூா் காவல் நிலையத்தில் சிவகாமியம்மாள் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபா்களை தனிப் படை அமைத்து தேடி வந்தனா்.
இந்நிலையில், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கைப்பைகளுடன் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் பிகாரைச் சோ்ந்தவா்கள் என்பதும், தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாகக் கூறி நகைப் பறிக்கும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும், சிவகாமியம்மாளிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
இவா்களுடன் தொடா்புடைய 5 சிறுவா்கள் உள்பட 8 பேரை வெவ்வேறு பகுதிகளிலிருந்து போலீஸாா் பிடித்தனா்.
இது தொடா்பாக பிகாரைச் சோ்ந்த அஜய்குமாா் (25), மற்றொரு அஜய் குமாா் (20), புஷியாதவ் (45), பிஷால் குமாா் ( 20), ரவீந்திரகுமாா் (25),
கிருஷ்ணகுமாா் (27), ரஞ்சித் குமாா்(26), சோனா குமாா் (22), சா்வன் குமாா் (20), ராகுல் குமாா் (23) மற்றும் 5 சிறுவா்களை கைது செய்த போஸீஸாா், அவா்களிடமிருந்த 6 பவுன், 3 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.