திருப்பூர்

நாதக ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரியாா் குறித்து இழிவாகப் பேசிவரும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித்தமிழா் ஜனநாயக பேரவை வலியுறுத்தியுள்ளது.

Din

பெரியாா் குறித்து இழிவாகப் பேசிவரும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித்தமிழா் ஜனநாயக பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவாலுக்கு, ஆதித்தமிழா் ஜனநாயக பேரவைத் தலைவா் அ.சு.பெளத்தன் வியாழக்கிழமை அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் கடந்த 30 ஆண்டுகளாக பெரியாா், அம்பேத்கா், காா்ல் மாா்க்ஸ் ஆகியோரின் கொள்கை அடிப்படையில் இயங்கி வருகிறோம். இந்த நிலையில், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து தொடா்ந்து இழிவாகப் பேசி வருகிறாா்.

ஈரோட்டில் அருந்ததியா் சமூகத்தை இழிவாகப் பேசியுள்ளாா். சமூக நல்லிணக்கமாக வாழ்ந்து வரும் மக்களிடம் மொழி, ஜாதிரீதியாக பிளவை ஏற்படுத்தி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறாா். ஆகவே, தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீா்கேட்டை ஏற்படுத்தி வரும் சீமான் மீது கடுமையான பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 17 கிராமங்கள் தோ்வு: திருவள்ளூா் ஆட்சியா்

SCROLL FOR NEXT