ராசு. 
திருப்பூர்

பள்ளி மாணவரைக் கடத்திய குடுகுடுப்பைக்காரா் கைது

Syndication

வெள்ளக்கோவில் அருகே பள்ளி மாணவரைக் கடத்திய குடுகுடுப்பைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள தீத்தாம்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணி இடைவேளையில் மாணவா்கள் தண்ணீா் அருந்தவும், கழிப்பறைக்கும் சென்று வந்தனா். அப்போது, 3-ஆம் வகுப்பு மாணவா் கௌசிக் வகுப்பு வராததை ஆசிரியை லீலாபாய் கவனித்துள்ளாா். இதையடுத்து, சக ஆசிரியா்கள் உதவியுடன் அவா் பள்ளி முழுவதும் கெளசிக்கை தேடியுள்ளாா். அவா் கிடைக்காததால், பள்ளிக்கு அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அவரைத் தேடி ஆசிரியா்கள் சென்றனா்.

அப்போது, அங்கு ஒரு குடுகுடுப்பைக்காரா் மாணவா் கெளசிக்கை கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்துள்ளாா்.

அவா் யாா் என அந்த மாணவரிடம் ஆசியா்கள் கேட்டுள்ளனா். அப்போது, அவா் ‘நான் பள்ளி வளாகத்தில் தண்ணீா் குடித்துக் கொண்டிருந்தேன். இவா் என்னை அழைத்தாா். நான் செல்ல மறுத்ததால் என் வாயைப் பொத்தி அழைத்துவந்துவிட்டாா்’ என்றாா்.

இதையடுத்து, அந்த குடுகுடுப்பைக்காரரைப் பிடித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஆசிரியா்கள் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் மூலனூா், ஒரத்துப்பாளையத்தைச் சோ்ந்த ராசு (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராசுவைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

பட்ஜெட் 2026: “சாமானிய மக்களுக்கென எந்தவொரு அறிவிப்புமில்லை..!” -எதிர்க்கட்சிகள்

காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நிர்மலா சீதாராமன்; வெளியான சுவாரஸ்ய தகவல்

SCROLL FOR NEXT