முகப்பு
திருப்பூர்

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:54 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சிவன் திரையரங்கு சாலை சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.