இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்புராணி (55). கணவா் ரவிசந்திரன் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், செம்மாண்டம்பாளையம் அரசுப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் அன்புராணி உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றுள்ளாா்.
அப்போது, அவா் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அன்புராணி ஈரோட்டில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.