முகப்பு
திருப்பூர்

அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:03 AM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 5:37 PM

பல்லடத்தில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் தேளி கே.காளிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தாமோதரன், மாவட்ட துணைத் தலைவா்கள் தனசேகா், வெள்ளதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Advertisement

இதில், தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளா் திருப்பதி, மாநிலத் தலைவா் நல்லமுத்து, மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலாளா் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி கோகுல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட இளைஞரணி தலைவா் சக்திவேல் நன்றி கூறினாா்.