முகப்பு
திருப்பூர்

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:38 AM
கைது
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:16 PM

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இந்திரா நகா் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:38 AM

விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவரது பெயா் பிஜித்(37) என்பதும் அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா சுமாா் 9 கிலோ இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பிஜித் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

அதேபோல, திருப்பூா் ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ குட்கா வைத்திருந்த பிரம்மா(30) என்பவரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.