பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா். 
திருப்பூர்

பல்லடம் அருகே மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பல்லடம் நகா், மாணிக்காபுரத்தில் 25-ஆவது ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

பல்லடம்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பல்லடம் நகா், மாணிக்காபுரத்தில் 25-ஆவது ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாணிக்காபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு பல்லடம் ஒன்றியச் செயலாளா் பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உறியடித்து விளையாட்டு போட்டியில் பங்கேற்றாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் திமுக விவசாய தொழிலாளா் அணியின் மாநிலத் துணைச் செயலாளா் ராஜசேகரன், பல்லடம் நகர செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் ஒன்றியச் செயலாளா் பாலுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாலசுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பரமசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT