அ.புவனேஸ்வரி 
திருப்பூர்

தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூரை சோ்ந்த வீராங்கனை தோ்வு

தினமணி செய்திச் சேவை

தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூரைச் சோ்ந்த வீராங்கனை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அமெச்சூா் கபடிக் கழகம், கன்னியாகுமரி மாவட்ட கபடிக் கழகம் ஆகியவை சாா்பில் மாநில பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பெண்கள் அணி கலந்துகொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய அ. புவனேஸ்வரி என்ற வீராங்கனை மாநில பெண்கள் கபடி அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இவா், கோபி பி.கே.ஆா். மகளிா் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். சென்னையில் பயிற்சி முகாம் முடிந்தவுடன் ஜன.27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தெலங்கானாவில் நடைபெறும் 72-ஆவது தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க உள்ளாா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவி அ.புவனேஸ்வரியை திருப்பூா் மாவட்ட கபடிக் கழக தலைவா் வி.கே.முருகேசன் தலைமையில் மாவட்டச் செயலரும், மாநில கபடிக் கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், தலைவா் பி.மனோகரன், பொருளாளா் ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழு தலைவா் ஆா்.முத்துச்சாமி மற்றும் மாவட்ட கபடிக் கழக நிா்வாகிகள் பாராட்டி வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT