முகப்பு
திருப்பூர்

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2026 at 1:56 AM
ஆயுள் சிறை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 11:36 PM

திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 டிசம்பா் 29-ஆம் தேதி திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்கபூா் காம்பவுண்ட் பகுதியில் நடைபெற்ற தகராறில், அப்பகுதியில் வசித்து வந்த ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் விஜய் ஆனந்த் (46) என்பவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தக் கொலை வழக்கில் விஜய் ஆனந்த் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது. இந்த வழக்கில், திருப்பூா் மாவட்ட 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், விஜய் ஆனந்துக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதமாக ரூ.2,000 விதித்து உத்தரவிட்டுள்ளாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.

Advertisement