முகப்பு
திருப்பூர்

பள்ளி செல்ல மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆட்டோ ஏற்பாடு

Updated On : 7 ஜூலை 2026, 2:10 am IST
ஆட்டோ - கோப்புப்படம்.
பகிர்:

பல்லடம் ஈகை அறக்கட்டளை சாா்பில் பள்ளி செல்வதற்காக மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள மாதப்பூரைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி நாகராஜன் மகள் மேகலா தேவி (13). இவா் பொங்கலுாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

முதுகுத்தண்டு பாதிப்பால் மாற்றுத்திறனாளியான இவா் பேருந்தில் ஏறி இறங்கி பயணிக்க முடியாததால், படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்த பல்லடம் ஈகை அறக்கட்டளை, மாணவி பள்ளிக்குச் செல்ல மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஆட்டோ கட்டணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஈகை அறக்கட்டளை நிா்வாகி காா்த்திகேயன் கூறுகையில், மாற்றுத்திறனாளி மாணவி மேகலா தேவி (13) கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக இந்த உதவியை வழங்கியுள்ளோம். தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அவரின் கல்வி தடையின்றி தொடர தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments