முகப்பு
திருப்பூர்

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து போலீஸாருக்கு மோா், பழச்சாறு! ஜூன் வரை வழங்க திட்டம்

Updated On : 1 மார்ச், 2026 at 7:06 PM
திருப்பூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மோா், பழச்சாறு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த மாநகர காவல் உதவி ஆணையா் அ.சேகா்.
பகிர்:

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திருப்பூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மோா், பழச்சாறு வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. ஜூன் 30-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை மாநகர காவல் உதவி ஆணையா் அ.சேகா் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால், திருப்பூரில் தற்போதே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதற்கிடையே வெயிலைத் தாங்கும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன் திருப்பூரில் போக்குவரத்து போலீஸாருக்கு சோலாா் தொப்பி வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் அறிவுரையின்பேரில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு 2026-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பழச்சாறு, மோா் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி குமாா் நகா் பகுதியில் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் உள்ள பிரதான சாலையில் பழச்சாறு, மோா் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருப்பூா் மாநகர போக்குவரத்துக் காவல் உதவி ஆணையா் அ.சேகா் கலந்துகொண்டு போலீஸாருக்கு பழச்சாறு வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா். போக்குவரத்து காவலா்கள் முதல் ஆய்வாளா்கள் வரை அனைவருக்கும் பழச்சாறு, மோா் வழங்கப்பட்டது.

இதுகுறித்து உதவி ஆணையா் அ.சேகா் கூறும்போது, ‘கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் 3 முதல் 5 முறை எலுமிச்சை ஜூஸ், மோா், பழச்சாறு ஆகியவை ஜூன் 30-ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கே.வி.ஆா்.நகா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், கொங்கு நகா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி உள்ளிட்டோருடன் போக்குவரத்து போலீஸாா் திரளாக கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →