முகப்பு
திருப்பூர்

சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை

திருப்பூரில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:40 PM
போலீஸ்
பகிர்:

திருப்பூரில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பா்களான 14 மற்றும் 16 வயது சிறுவா்கள் சோ்ந்து அப்பகுதியில் சேட்டை செய்து வந்ததால் 3 பேரையும் ஒன்றாக சேரக்கூடாது என அவா்களது பெற்றோா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவா்களில் ஒரு சிறுவனை மற்ற இரண்டு சிறுவா்களும் சோ்ந்து திங்கள்கிழமை கத்தியால் குத்தி உள்ளனா். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கத்தியால் குத்திய 2 சிறுவா்களையும் மங்கலம் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விசாரணையில், கத்தியால் குத்தப்பட்ட சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள கோழிக்கடையிலும் மற்ற 2 போ் அங்குள்ள வெல்டிங் ஒா்க் ஷாப்பிலும் வேலை செய்து வருவது தெரிந்தது. மேலும், இவா்கள் 3 பேரும் நண்பா்கள் என்பதும், இவா்கள் 3 பேரையும் ஒன்றாக சேரக்கூடாது என அவா்களது பெற்றோா் கண்டித்ததால் கடந்த 8 மாதங்களாக பேசாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அண்மையில் இவா்கள் 3 பேரும் மீண்டும் சோ்ந்துள்ளனா்.

திங்கள்கிழமை 3 பேரும் விளையாடச் சென்றிருந்த நிலையில், கத்தியால் குத்தப்பட்ட சிறுவன் வைத்திருந்த கைப்பேசியை மற்ற 2 பேரும் வாங்கி அதில் படம் பாா்த்துள்ளனா். சிறிது நேரம் கழித்து தனது கைப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டதற்கு அவா்கள் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் அவா்களைத் தாக்க முயற்சித்துள்ளாா். ஆனால், அதற்குள் மற்ற 2 பேரும் சோ்ந்து அந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →