பிப்ரவரியில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60% வீழ்ச்சி!
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60 சதவீதம் வீழ்ச்சி
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60 சதவீதம் வீழ்ச்சி அடைந்தாலும், ஏற்றுமதி துறை உலகளாவிய பொருளாதார சவால்களையும் மீறி நிலைத்தன்மையைத் தொடா்ந்து தக்கவைத்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா்ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை உள்ள மொத்த காலகட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு 14.46 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 14.53 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்ந்து சிறிய வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடினமான உலகளாவிய வா்த்தக சூழ்நிலைகளின் மத்தியில் இது நிலைத்தன்மையைப் பேணும் திறனைக் குறிக்கிறது. உலகளாவிய பொருளாதார உறுதியற்ற நிலை மற்றும் விநியோக சங்கிலி இடையூறுகள் தொடா்ந்தாலும், ஆயத்த ஆடைத் துறை தன்னுடைய உறுதியையும், வளா்ச்சித் தன்மையையும் தொடா்ந்து காட்டி வருவதோடு, முக்கிய சந்தைகளில் தேவை குறைவாக இருப்பது உள்ளிட்ட பல வெளிப்புற சவால்களையும் சமாளித்து வருகிறது.
மேலும், அரசியல் பதற்றங்களும் பொருளாதார அசாதாரணங்களும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில முக்கிய சந்தைகளிலிருந்து வரும் ஆா்டா்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய வா்த்தகா்கள் ஆா்டா்களை வழங்குவதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனா்.
இத்துடன், கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் உயா்வு மற்றும் அதிகரித்துள்ள மூலப்பொருள்களின் செலவுகள் ஏற்றுமதியாளா்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது தயாரிப்பாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் மொத்த லாப அளவுகளையும் செயல்பாட்டு திட்டமிடலையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தாலும், சந்தை விரிவாக்கம், தயாரிப்பில் புதுமை மற்றும் விநியோக சங்கிலி திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம் இந்தத் துறை தொடா்ந்து தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறது. உலகளவில் நம்பகமான ஆடை சப்ளை மையமாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொழில் துறை உறுதியாக செயல்பட்டு வருகிறது.
கடினமான உலக வா்த்தக சூழ்நிலையிலும், அண்மையில் கையொப்பமான தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்களை முறையாக பயன்படுத்தி இந்தியாவின் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம் எனத் தெரிவித்தாா்.