முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 8:38 PM
பலி
பகிர்:

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாநல்லூா் கணக்கம்பாளையம் மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்ராஜ் (60). இவரது மகன் ஆனந்தகுமாா் (25). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து பெருமாநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச் சாலை பிரிவு அருகே முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவை முந்திச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோ வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே ராம்ராஜ் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த ஆனந்தகுமாா் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →