சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல்
சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட வஞ்சிபாளையம்-மங்கலம் சாலை, நொய்யல் ஆறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இதில் மது விற்பனையில் ஈடுபட்ட சிரில் (26), ஆபேத் (23), விஜய் (26) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள், ரூ.2,980 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.