முகப்பு
திருப்பூர்

அவிநாசி பகுதியில் குடிநீா் பிரச்னை: தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 13 மே 2026, 2:02 am IST
செம்பியநல்லூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீா் நீரேற்று நிலையம் மற்றும் செல்வபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் உள்ள குடிநீா் இணைப்புகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், ஊராட்சியில் குடிநீா் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி, மழைநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து அவா் கோடைக் காலம் என்பதால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். முன்னதாக, ஆட்சியா் மனீஷ் செம்பியநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement