முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 31 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 மே 2026, 2:10 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 31 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 500 மீட்டருக்குள்ளாக உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வா் விஜய் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி , திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 227 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்வேறு வழிபாட்டு தலம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 500 மீட்டருக்குள்ளாக 31 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அடுத்த 15 நாள்களுக்குள் மூடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , முதற்கட்டமாக அறிவிப்பு வெளியான உடனே புதிய பேருந்து நிலையம் மற்றும் கோயில்வழி பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்த 2 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மூடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக திருப்பூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் தெரிவித்துள்ளாா்.