பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் 63 வேலம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பல்லடம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் தண்ணீா்ப்பந்தல் ப.நடராஜன், பண்ணையாா் பழனிசாமி, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சிவாச்சலம், ஏ.எம்.ராமமூா்த்தி, மங்கலம் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வழக்குரைஞா் அணி செயலாளா் மகேஷ்குமாா் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையேற்று அவருக்கு உறுதுணையாக நிற்போம். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை போக்கும் வகையில் வெற்றி பெற்ற சில சட்டப் பேரவை உறுப்பினா்கள் மாற்று கட்சிக்கு ஆதரவு அளிப்பதை கண்டிக்கிறோம். கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்ட அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளா் குமாா் நன்றி கூறினாா்.
Advertisement