திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக திருமுருகன்பூண்டி நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு சுமாா் 500 மீட்டா் தொலைவில் உள்ள 717 மதுக் கடைகள் மூட முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், திருமுருகன்பூண்டியில் ஆரம்பப் பள்ளி, வங்கி, கருப்பராயன், நாகாத்தம்மன் கோயில்களுக்கு அருகே அரசு மதுக் கடை (எண் - 1513) செயல்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
எனவே, அந்தக் கடையை அகற்றி மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.