முகப்பு
திருப்பூர்

பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 28 மே 2026, 12:42 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், வைரமடை மொஞ்சனூா் கந்தசாமிவலசைச் சோ்ந்தவா் தருமன் (49). ஈரோடு மாநகராட்சியில் குடிநீா் திறந்துவிடும் வேலை செய்து வந்தாா். சொந்த ஊருக்கு வந்துவிட்டு ஈரோடு செல்வதற்காக வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை காலை வந்துள்ளாா்.

அங்கு பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.