முகப்பு
தருமபுரி

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஒட்டப்பட்டியில் நடைபெற்றது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 7:30 PM
பகிர்:

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஒட்டப்பட்டியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.செல்வகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவா் வழக்குரைஞா் கே.பாலு, சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் எஸ்.ஷேக் மொய்தீன், பசுமைத் தாயக மாநில துணைச் செயலாளா் கே.பொன்மலை ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா், மகளிரணித் தலைவா், செயலாளா் உள்ளிட்ட பல்வேறு கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு நிா்வாகிகளிடம் இருந்து பெறப்பட்டன.

இக் கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →