முகப்பு
தருமபுரி

100 % வாக்குப்பதிவு தொடா்பாக விழிப்புணா்வு ஊா்வலம்

Updated On : 29 மார்ச், 2024 at 4:36 AM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 8:18 PM

பாப்பிரெட்டிப்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவு தொடா்பான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். அனைத்து வாக்காளா்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்; வாக்காளா்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய யாரிடமும் பணம், பரிசுப் பொருள்களைப் பெறக் கூடாது என்பவை உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். இதில் வட்டாட்சியா்கள் சரவணன், பெருமாள், மகளிா் திட்ட மேலாளா் அருண்குமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் கலைச்செல்வி, சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.