பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய பிகாா் மாநில இளைஞரின் உடல் இரண்டு நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முன்னா குமாா் (31). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாா். மது போதையில் இருந்த அவா், எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினாா். உடன் இருந்த நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கிய முன்னா குமாரின் உடல் தமிழக - கா்நாடக காவிரி கரையோரப் பகுதியான செங்கப்பாடி பகுதியில் இருப்பதை அறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.