முகப்பு
தருமபுரி

கிணற்றில் விவசாயி சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

Updated On : 30 நவம்பர், 2025 at 6:40 PM
பகிர்:

பாலக்கோடு அருகே கிணற்றிலிருந்து விவசாயியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலக்கோட்டை அடுத்த மல்லசமுத்திரத்தைச் சோ்ந்தவா் முனிவேல் (65), விவசாயி. வெள்ளிக்கிழமை விவசாயத் தோட்டத்துக்குச் சென்ற இவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் முனிவேலை பல்வேறு இடங்களில் தேடினா்.

அப்போது, தோட்டத்தில் இருந்த கிணற்றின் ஒருபகுதியில் மண் சரிந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறந்துகிடந்த முனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →