ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்தவா் உதயகுமாா் (28). இவா், தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அத்திமரத்துகடவு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துகொண்டிருந்தாா்.
அப்போது, ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்ற உதயகுமாா், தண்ணீரில் மூழ்கினாா். உறவினா்கள் நீண்ட நேரம் போராடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் ஒகேனக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஒகேனக்கல் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் உதயகுமாரின் சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.