தருமபுரி

தருமபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தருமபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ. 4 லட்சத்தை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

தருமபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ. 4 லட்சத்தை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்த பாலஜங்கமனஅள்ளியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (54), பெருங்களத்தூா் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தாா். இவரது மகன் அரவிந்த், பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிவந்தாா்.

இந்தநிலையில், அரவிந்துக்கு தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் வேலைக்கான நோ்காணல் நடைபெறுவதற்காக அழைப்புவந்தது. இதையடுத்து, மகனுடன் அவரது தந்தை, தாய் ஆகிய மூவரும் புதன்கிழமை ஒரத்தநாடு சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 4 லட்சம் ரொக்கம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தும் பாஜக: நெல்லை முபாரக்

திருவள்ளூா் பகுதியில் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்ற ரயில்கள்

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT