ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.
தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இருப்பினும் ஐவாா்பாணி, ஐந்தருவிகள் தண்ணீரின்றி வடு காணப்படுகின்றன.