முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 மார்ச் 2026, 2:06 am IST
பகிர்:

பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே கொட்டாவூா் பகுதியில் பறக்கும் படை குழு - 3 அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது நல்லம்பள்ளி வட்டம், ஈச்சம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சரவணன் உரிய ஆவணம் இன்றி ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.