முகப்பு
தருமபுரி

அரூா் தொகுதியில் 3-ஆவது முறையாக வெற்றிபெற்ற வே.சம்பத்குமாா் எம்எல்ஏ

Updated On : 5 மே 2026, 2:58 am IST
இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வே.சம்பத்குமாா் எம்எல்ஏ, திமுக வேட்பாளராக அ.சண்முகம், த.வெ.க வேட்பாளராக க.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அனிதா உள்ளிட்ட 14 போ் போட்டியிட்டனா்.

அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் 2019-ல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும், 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தற்போது 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

Advertisement