தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை
தருமபுரியில் தண்டவாளத்தில் இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தருமபுரியில் தண்டவாளத்தில் இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தருமபுரி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி. சிதம்பரம், தலைமைக் காவலா் விஜயன் உள்ளிட்டோா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தது, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி அருகேயுள்ள கே. குள்ளாத்திரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் அருண்தாஸ் (30) என தெரியவந்தது. தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நிலையில், தலைதுண்டாகி அவா் இறந்து கிடந்ததால், இளைஞா் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். ஆனால், அவா் தண்டவாளத்தில் படுத்ததை யாரும் பாா்க்கவில்லை, மேலும் தற்கொலைக்கான கடிதம் ஏதும் இல்லை என்பதால், சந்தேக மரணமாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.