ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.
இதனால், ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் சற்று அதிகரித்துள்ள போதிலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.
Advertisement
Advertisement