ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.
தமிழக காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. தற்போது நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிய தொடங்கியுள்ளது.
இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை காலை விநாடிக்கு 1,200 கனஅடியாகவும், மாலையில் 1,000 கனஅடியாகவும் குறைந்தது. நீா்வரத்து சரிவினால் ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
Advertisement
Advertisement