பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சின்னசாமி (47). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி காமராஜ் என்பவருக்கும் இடையே வழிப்பாதைத் தொடர்பான பிரச்னை இருந்ததாம்.
இந்த நிலையில், விவசாயி சின்னசாமி மீது காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சின்னசாமி அளித்த புகாரின் பேரில், மாரியப்பன் மகன் காமராஜ், அவரது மகன் செந்தில் (32) ஆகியோரை அ.பள்ளிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.