தருமபுரி

ஜெயலலிதா 2-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

DIN

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் புதன்கிழமை
அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் நல்லதம்பி, இலக்கிய அணிச் செயலர் தகடூர் விஜயன், மகளிரணிச் செயலர் ஜெ.சுமதி, நகரச் செயலர் குருநாதன், நிர்வாகிகள் பூக்கடை ரவி, அ. செந்தில்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, கட்சியினர் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஜெயலலிதாவின் உருவப் படங்கள் வைக்கப்பட்டு, அக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, அமமுகவினர் தருமபுரி திருப்பத்தூர் சாலையில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊத்தங்கரையில்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் எ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார்.
நில வள வங்கித் தலைவர் சாகுல் அமீது, நகரச் செயலாளர் பி.கே. சிவானந்தம், தொகுதிச் செயலாளர் திருஞானம் முன்னிலை
வகித்தனர்.
முன்னதாக நான்கு முனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்.  உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். பிறகு ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் வி. சுரேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட  அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் வடக்கு அருணகிரி, தெற்கு சிவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொறுப்பாளர் வி.ரத்தினம், நகரப் பொருளாளர் சிவபிரகாசம், உள்ளிட்ட  கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஒசூரில்...
ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஒசூரில் நகரச் செயலாளர் எஸ். நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
ஒசூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு  மாலை அணிவித்து நகரச் செயலாளர் நாராயணன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.பி(எ) ஜெயப்பிரகாஷ், முத்துராஜ், தவமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று சூளகிரியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஏவிஎம் மது (எ) ஹேம்நாத் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அரூரில்...
அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு,  அரூர் ஒன்றியச் செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில், அதிமுக  மாவட்ட பிரதிநிதி ஏ. சம்பத், ஊராட்சிச் செயலாளர்கள் பி.வி. செல்வம், சின்னப் பையன், நிர்வாகிகள் செழியன், வெள்ளிங்கிரி, பழனி, து. கிருஷ்ணன், சின்னராஜ், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT