தருமபுரி

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: 19 பேர் கைது

DIN

தருமபுரி பேருந்து நிலையத்துக்குள் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில், தடையை மீறி தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த நகர காவல் நிலையப் போலீஸார் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 19 பேரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT