தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூலை 14) பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவித்துள்ளார்.
தருமபுரி வட்டத்தில் முத்துப்பட்டியிலும், பென்னாகரம் வட்டத்தில் ஈச்சப்பாடியிலும், பாலக்கோடு வட்டம் கேசர்குளி சாலையிலும், அரூர் வட்டத்தில் எச்.தொட்டம்பட்டியிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கவுண்டம்பட்டியிலும், நல்லம்பள்ளி வட்டத்தில் ஈசல்பட்டியிலும், காரிமங்கலம் வட்டத்தில் சங்கணம்பட்டியிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறைகேட்பு முகாமில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.